“பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது அநீதி” - பெ.மணியரசன்

“பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது அநீதி” - பெ.மணியரசன்

விவசாயிகள் சங்கத் தலைவர் பி. ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது அநீதியானது என தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக பெட்ரோலிய கிணறுகள் தோண்டக்கூடாது, மீத்தேன் எடுக் க க் கூடாது. காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று இயற்கை வேளாண்மை அறிஞர் கோ.நம்மாழ்வார் போராடினார்.

இதுபோன்ற பொது நலன் தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்குகள் இன்றும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் மிச்சம் மீதியாக இருப்பது நீதித் துறை தன்னாட்சி தான். அதற்கும் ஆபத்து வரக்கூடாது. எனவே இதுகுறித்து சட்டத்துறை வல்லுநர்கள், வழக்கறிஞர்கள்; மனித உரிமைச் சிந்தனையாளர்கள் விவாதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.