மேற்கு வங்க ஆசிரியர்கள் நியமன ரத்து உத்தரவு செல்லாது: கொல்கத்தா ஐகோர்ட் அதிரடி!

மேற்கு வங்க ஆசிரியர்கள் நியமன ரத்து உத்தரவு செல்லாது: கொல்கத்தா ஐகோர்ட் அதிரடி!

 மேற்கு வங்கத்தில் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக 32,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்த தனி நீதிபதி அமர்வு உத்தரவை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்தது.

மேற்கு வங்கத்தில் 32 ஆயிரம் ஆசிரியர்கள் 2014 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மூலம் பணியமர்த்தப்பட்டனர். இந்த நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயின் ஒற்றை பெஞ்ச், 2023 ஆண்டு மே 12 அன்று, இந்த 32,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்தது.

மேலும், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பணி நீக்கம் செய்வது தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீதிபதிகள் கூறினர்.

கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற மம்தா பானர்ஜி, “நாங்கள் நீதித்துறை செயல்முறையை மதிக்கிறோம். எங்கள் சகோதர சகோதரிகள் தங்கள் வேலைகளை மீண்டும் பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று கூறினார்.