“எனது எதிர்காலத்தை பிசிசிஐ முடிவு செய்யும்” - வரலாற்று தோல்விக்குப் பின் கவுதம் கம்பீர் கூறியது என்ன?

“எனது எதிர்காலத்தை பிசிசிஐ முடிவு செய்யும்” - வரலாற்று தோல்விக்குப் பின் கவுதம் கம்பீர் கூறியது என்ன?

தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான குவாஹாட்டி டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி 408 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. டெஸ்ட் கிரிக்​கெட் வரலாற்​றில் இந்​திய அணி​யின் மோச​மான தோல்​வி​யாக இது அமைந்​தது.

அதேவேளை​யில் தென் ஆப்​பிரிக்க அணி 25 ஆண்​டு​களுக்​குப் பின்​னர் இந்​திய மண்​ணில் டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்​பற்றி கோப்​பயை வென்​றது. கவுதம் கம்​பீர் பயிற்​சி​யில் இந்​திய கிரிக்​கெட் அணி சொந்த மண்​ணில் விளையாடிய 7 டெஸ்ட் போட்​டிகளில் 5-ல் தோல்வி கண்​டுள்​ளது.

சாம்​பியன்ஸ் டிராபியை​யும், ஆசி​யக் கோப்​பையை​யும் வென்றுள்​ளோம். குற்​றம் சுமத்​துதல் எல்​லோர் மீதும் இருக்​கிறது. அது என்​னில் இருந்து தொடங்​கட்​டும். நாங்​கள் சிறப்​பாக விளை​யாட வேண்​டும். 95 ரன்​களுக்கு ஒரு விக்​கெட்டை இழந்த நிலை​யில் இருந்து 122 ரன்​களுக்​குள் 7 விக்​கெட்​கள் சரிவு என்​பதை ஏற்​க​ முடிய​வில்​லை. இதற்​காக ஒரு வீரரையோ அல்​லது ஒரு ஷாட்டையோ குறை ​கூற முடி​யாது. பழி எல்​லோரை​யுமே சேரும். தனிப்​பட்ட வீரரை ஒரு​போதும் நான் குற்​றம் கூறியது கிடை​யாது.

டெஸ்ட் கிரிக்​கெட்​டில் வெற்​றி​பெற திறமை​யான, துணிச்​சலான வீரர்​கள் தேவை​யில்​லை. குறை​வான திறன்​கள் கொண்ட, ஆட்​டத்​தின் எந்த சூழ்​நிலை​யிலும் வலு​வான மனநிலை​யுடன் விளை​யாடக்​கூடிய வீரர்​களே தேவை​யாக உள்​ளனர். இவ்​வாறு அவர் கூறி​னார்​.