திமுக நிர்வாகி சுட்டுக்கொலை... சேலத்தில் பரபரப்பு சம்பவம்

திமுக நிர்வாகி சுட்டுக்கொலை... சேலத்தில் பரபரப்பு சம்பவம்
சேலத்தில் நிலத்தகராறு தொடர்பான பிரச்னையில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ளது கரிய கோவில். இங்குள்ள கிரான்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45) விவசாயி. கிரான் காடு திமுக கிளை செயலாளராக உள்ளார். இவருக்கும் உறவினர்கள் ராஜமாணிக்கம் மற்றும் பழனிச்சாமி ஆகியோருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.
இவர்களது சண்டையை அவ்வப்போது அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வந்தனர். நேற்று நள்ளிரவு ராஜேந்திரன் வீட்டு அருகே படுத்திருந்தார். அப்போது ராஜேந்திரனை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் இறந்துவிட்டார்.
இதனை அறிந்த வாழப்பாடி டிஎஸ்பி சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ராஜேந்திரனின் சடலத்தை மீட்டு உடற் கூராய்வு ராய்வுசெய்ய சடலத்தை சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இந்த சம்பவம் தொடர்பாக ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.