ஜப்பானில் நிலநடுக்கத்தில் சிக்கி 30 பேர் காயம் - சுனாமி எச்சரிக்கை வாபஸ்
ஜப்பானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்குவதாகவும், பாதிப்புகள் குறித்து மதிப்பிட அவசரகால உயர் பணிக்குழுவை நியமித்துள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5-ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வட ஜப்பானின் ஹோன்ஷு தீவிலுள்ள ஆவோமோரி, ஹொக்காடியோ தீவின் தென் பகுதிகளில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் அதிகமாக உணரப்பட்டது. பல கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
30 பேர் காயம்: இந்த நிலநடுக்கத்தால் ஆவோமோரி டவுன் பகுதியில் ஓட்டலில் தங்கியிருந்த சிலர் காயம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகின. ஆவோமோரி, ஹொக்காடியோ பகுதியில் நிலநடுக்கத்தின் அதிர்வு காரணமாக குடியிருப்புகளில் சுவர் மற்றும் மாடங்களில் வைக்கப்பட்ட பொருட்கள் கீழே விழுந்தன. சில இடங்களில் விபத்து சம்பவங்களும் ஏற்பட்டன.
இதுகுறித்து ஜப்பான் பிரதமர் சானி டகாய்ச்சி நிருபர்களிடம் கூறும்போது, “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவோம். பாதிப்புகள் குறித்து மதிப்பிட அவசரகால உயர் பணிக்குழுவை நியமித்துள்ளோம்” என்றார்.