ஜப்பானில் நிலநடுக்கத்தில் சிக்கி 30 பேர் காயம் - சுனாமி எச்சரிக்கை வாபஸ்

ஜப்பானில் நிலநடுக்கத்தில் சிக்கி 30 பேர் காயம் - சுனாமி எச்சரிக்கை வாபஸ்

ஜப்பானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்குவதாகவும்,  பாதிப்​பு​கள் குறித்து மதிப்​பிட அவசர​கால உயர் ​பணிக்​குழுவை நியமித்​துள்​ளதாகவும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். 

ஜப்​பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்​டர் அளவில் 7.5-ஆக பதி​வாகி உள்​ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரி​வித்​துள்​ளது. வட ஜப்​பானின் ஹோன்ஷு தீவிலுள்ள ஆவோமோரி, ஹொக்​காடியோ தீவின் தென் பகு​தி​களில் இந்த சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் அதி​க​மாக உணரப்​பட்​டது. பல கட்​டிடங்​கள் அதிர்ந்​தன. இதனால், அதிர்ச்​சி​யடைந்த மக்​கள் வீடு​களை விட்டு வெளி​யேறி சாலைகளில் தஞ்​சம் புகுந்​தனர்.

30 பேர் காயம்: இந்த நிலநடுக்​கத்​தால் ஆவோமோரி டவுன் பகு​தி​யில் ஓட்​டலில் தங்​கி​யிருந்த சிலர் காயம் அடைந்​த​தாக அங்​கிருந்து வரும் தகவல்​கள் வெளியாகின. ஆவோமோரி, ஹொக்​காடியோ பகுதியில் நிலநடுக்கத்தின் அதிர்வு காரணமாக குடியிருப்புகளில் சுவர் மற்றும் மாடங்களில் வைக்கப்பட்ட பொருட்கள் கீழே விழுந்தன. சில இடங்களில் விபத்து சம்பவங்களும் ஏற்பட்டன.

இதுகுறித்து ஜப்​பான் பிரதமர் சானி டகாய்ச்சி நிருபர்​களிடம் கூறும்​போது, “நிலநடுக்​கத்​தால் பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு தேவை​யான உதவி​களை வழங்​கு​வோம். பாதிப்​பு​கள் குறித்து மதிப்​பிட அவசர​கால உயர் ​பணிக்​குழுவை நியமித்​துள்​ளோம்” என்​றார்.