‘அரசமைப்பை காக்க ராகுல் காந்தி போராடுகிறார்’ - அமைதிக்கான நோபல் பரிசு குறித்து காங். கருத்து

‘அரசமைப்பை காக்க ராகுல் காந்தி போராடுகிறார்’ - அமைதிக்கான நோபல் பரிசு குறித்து காங். கருத்து

அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. அவர் வெனிசுலா நாட்டின் எதிர்க்​கட்​சித் தலை​வர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவருடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஒப்பிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுரேந்திரா ராஜ்புத்.

“அரசமைப்பை பாதுகாக்கும் நோக்கில் போராடிய வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, தேசத்தின் அரசமைப்பை காக்கும் போராட்டத்தில் தலைமை வகிக்கிறார்” என இந்தி மொழியில் எக்ஸ் சமூக வலைதள பதிவில் சுரேந்திரா ராஜ்புத் தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு எதிராக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்து வருகின்றனர். வாக்கு திருட்டு விவகாரம், பிஹார் சிறப்பு வாக்காளர் திருத்த பணி உள்ளிட்டவை இதில் அடங்கும். குறிப்பாக என்டிஏ கூட்டணி ஆட்சியில் இந்திய தேசத்தில் ஜனநாயகம் என்பது இல்லை என காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த மரி​யா? - கடந்த 1967-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி வெனிசுலா​வின் கரகஸ் நகரில் மரியா கொரினா மச்​சாடா பிறந்​தார். பொறி​யாள​ரான இவர் கடந்த 2001-ம் ஆண்​டில் சுமேட் என்ற தொண்டு அமைப்பை தொடங்​கி​னார்.

இதன்​பிறகு அவர் அரசி​யலில் கால் பதித்​தார். கடந்த 2010-ம் ஆண்​டில் வெனிசுலா எம்​.பி.​யாக தேர்வு செய்​யப்​பட்​டார். நாடாளு​மன்​றத்​தில் சர்​வா​தி​காரம், ஊழலுக்கு எதி​ராக துணிச்​சலாக குரல் எழுப்​பி​னார். இதன்​காரண​மாக கடந்த 2014-ம் ஆண்​டில் அவரது எம்பி பதவி ரத்து செய்​யப்​பட்​டது.

கடந்த 2024-ம் ஆண்​டில் நடை​பெற்ற வெனிசுலா அதிபர் தேர்​தலில் ஜனநாயக ஒற்​றுமை வட்​டமேஜை என்ற எதிர்க்​கட்​சிகள் கூட்​டமைப்பு சார்​பில் மரியா போட்​டி​யிட்​டார். ஆனால் அதிபர் தேர்​தலில் போட்​டி​யிட அவருக்கு தடை விதிக்​கப்​பட்​டது.

கடந்த 2013-ம் ஆண்டு முதல் வெனிசுலா​வின் அதிப​ராக நிக்​கோலஸ் மதுரோ பதவி வகித்து வரு​கிறார். அவரது ஆட்​சிக்கு எதி​ராக மரியா தொடர் போராட்​டங்​களை நடத்தி வரு​கிறார். அந்த நாட்​டின் இரும்பு பெண்​மணி​யாக அவர் போற்​றப்​படு​கிறார். கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற மரி​யா​வுக்கு 3 பிள்​ளை​கள் உள்​ளனர். அவர்​களின் உயிருக்கு அச்​சுறுத்​தல் இருப்​ப​தால் 3 பேரும் வெளி​நாடு​களில் உள்​ளனர்.