தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 90 பேருக்கு ‘கலைமாமணி’ விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 90 பேருக்கு ‘கலைமாமணி’ விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்​நாடு இயல் இசை நாடக மன்​றம் சார்​பில் கடந்த 2021, 2022, 2023-ம் ஆண்​டு​களுக்​கான ‘கலை​மாமணி’ விருதுகளை 90 கலைஞர்​களுக்கு முதல்​வர் ஸ்டா​லின் வழங்​கி​னார். நமது கலைஞர்​கள் இங்கு மட்​டுமின்​றி,உலகம் முழு​வதும் சென்று தமிழ்க் கலைகளை பரப்ப வேண்​டும் என்று அவர் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

தமிழ்​நாடு இயல் இசை நாடக மன்​றம் சார்​பில், 2021, 2022, 2023-ம் ஆண்​டு​களுக்​கான ‘கலை​மாமணி’ விருதுகள் வழங்​கும் விழா சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. அகில இந்​திய விருது பெறும் கலை வித்​தகர்​களுக்​கான பார​தி​யார் விருதை (இயல்) ந.முரு​கேச பாண்​டியனுக்​கும், எம்​.எஸ்​.சுப்​புலட்​சுமி விருதை (இசை) கே.ஜே.யேசு​தாஸுக்​கும், பாலசரஸ்​வதி விருதை (நாட்​டி​யம்) முத்​துகண்​ணம்​மாளுக்​கும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வழங்​கி​னார். யேசு​தாஸ் சார்​பில் அவரது மகன் விஜய் யேசு​தாஸ், விருதை பெற்​றுக் கொண்​டார்.

சிறந்த கலை நிறு​வனத்​துக்​கான கேட​யம் சென்​னை​யில் உள்ள தமிழ் இசைச் சங்​கத்​துக்​கும் (ராஜா அண்​ணா​மலை மன்​றம்), சிறந்த நாடகக் குழு​வுக்​கான சுழற்​கேட​யம் மதுரை மாவட்​டம் பாலமேட்​டில் உள்ள கலை​மாமணி எம்​.ஆர்​.​முத்​து​சாமி நினைவு நாடக மன்​றத்​துக்​கும் வழங்​கப்​பட்​டது. தொடர்ந்​து, 2021, 2022, 2023-ம் ஆண்​டு​களுக்​கான கலை​மாமணி விருதுகளை ஆண்​டுக்கு தலா 30 பேர் வீதம், மொத்​தம் 90 கலைஞர்​களுக்கு முதல்​வர் வழங்​கி​னார்.

அந்த வகை​யில், நாடக நடிகர் என்ற அடிப்​படை​யில் பூச்சி எஸ்​.​முரு​கன், திரைப்பட நடிகர்​கள் எஸ்​.ஜே.சூர்​யா,விக்​ரம்​பிரபு, கே.மணி​கண்​டன், நடிகைகள் சாய் பல்​ல​வி, ஜெயா வி.சி.கு​க​நாதன், இயக்​குநர் லிங்​கு​சாமி, இசையமைப்​பாளர் அனிருத் ரவிச்​சந்​திரன், பாடலாசிரியர் விவேகா உட்பட பல்​வேறு கலைப் பிரிவு​களை சேர்ந்​தவர்​கள் பெற்​றனர். பாடகி ஸ்வேதா மோகன் சார்​பில் அவரது தாய் சுஜா​தா, விருதை பெற்​றுக் கொண்​டார். கலை​மாமணி விருது பெறும் கலைஞர்​களுக்கு 3 பவுன் தங்​கப் பதக்​கம் மற்​றும் விருது பட்​ட​யம் வழங்​கப்​பட்​டது.

விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: இது கலைஞர்​களைப் போற்​றும் அரசாக உள்​ளது. சிம்​பொனி சிகரம் தொட்ட இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு திமுக அரசு எடுத்த பாராட்டு விழாவே அதற்கு சான்​று. இசை​ஞானி மேல் இருப்​பது கலைப் பாசம், தமிழ்ப் பாசம், தமிழர் பாசம். அதே பாசத்​தின் அடிப்​படை​யில் விருதுகளை வழங்​கு​கிறோம். இயல், இசை, நாடகம் என முத்​தமிழை​யும் வளர்த்​தது திரா​விட இயக்​கம்.

தமிழர் என்ற தகு​தி, சுயமரி​யாதையை இழந்து வாழ்​வ​தில் எந்த பயனும் இல்​லை. அதனால், கலைகள், மொழி, இனம், அடை​யாளத்தை காப்​போம். நமது கலைஞர்​கள் இங்கு மட்​டுமல்ல, உலகம் முழு​வதும் சென்று கலைகளை வளர்க்க வேண்​டும். தமிழ்க் கலைகளை பரப்ப வேண்​டும். அதற்​கான அனைத்து முயற்​சிகள், உதவி​களை இயல் இசை நாடக மன்​றம் செய்ய வேண்​டும். இதற்கு அரசு உறு​துணை​யாக இருக்​கும்.இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

விழா​வில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்​கள் மு.பெ.​சாமி​நாதன், மா.சுப்​பிரமணி​யன், சேகர்​பாபு, இயல்​ இசை நாடக மன்​றத்​ தலை​வர்​ வாகை சந்​திரசேகர்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.