திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் லஞ்சம் பெற்ற 9 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம்

திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் லஞ்சம் பெற்ற 9 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம்

​திரு​வல்​லிக்​கேணி அரசு தாய்​சேய் நல மருத்​து​வ​மனை​யில் நோயாளி​களிடம் லஞ்​சம் பெற்ற 9 ஒப்​பந்த ஊழியர்​கள் பணி நீக்​க​மும், 4 மருத்​துவ பணி​யாளர்​கள் பணி​யிடை நீக்​கமும் செய்​யப்​பட்​டுள்​ளனர் என அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார்.

சென்னை எழும்​பூர் அரசு கண் மருத்​து​வ​மனை​யில் ரூ.14 லட்​சம் மதிப்​பீட்​டில் 2 பேட்​டரி வாக​னங்​களை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று தொடங்கி வைத்​தார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: திமுக அரசு பொறுப்​பேற்ற பிறகு எழும்​பூர் அரசு கண் மருத்​து​வ​மனை​யில் ரூ.74.28 கோடி மதிப்​பீட்​டில் பல்​வேறு புதிய வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

தமிழகத்​தில் தற்​போது பார்வை இழப்பு தடுப்பு 0.33 சதவீத​மாக இருக்​கிறது. தமிழகத்​தில் 95 அரசு கண் மருத்​து​வ​மனை​களும், 38 அரசு காணொலி கண் மருத்​து​வ​மனை​களும், 13 அரசு நடமாடும் கண் பரிசோதனை பிரிவு​களும் இயங்கி வரு​கின்​றன.

இந்த ஆண்டு 60 லட்​சம் செல​வில் கிருஷ்ணகிரி, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களுக்கு புதிய நடமாடும் கண் பரிசோதனை பிரிவு​கள் தொடங்​கப்பட உள்​ளன. கிண்​டி, கூடலூர், வாலாஜா, மேலப்​பாளை​யம் போன்ற மருத்​து​வ​மனை​களில் கண் சிறப்பு அறுவை அரங்​கத்​துடன் கண் பிரிவு அடுத்த மாதம் பயன்​பாட்​டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்​பட்​டுள்​ளது.

இந்த ஆண்டு இது​வரை 12,167 கண்​புரை பரிசோதனை முகாம்​கள் நடத்​தப்​பட்​டு, 1,82,423 பயனாளி​களுக்கு இலவச கண்​புரை அறுவை சிகிச்​சைகள் அரசு மற்​றும் தனி​யார் தொண்டு மருத்​து​வ​மனை​களில் செய்து முடிக்​கப்​பட்​டுள்​ளன. இதற்​காக சுமார் ரூ.30 கோடி உதவி தொகை​யாக வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த ஆண்டு தற்​போது​ வரை 5,946 கண்​கள் தான​மாக பெறப்​பட்​டுள்​ளன.

இந்​தி​யா​விலேயே அதிக கண் தானம் பெறப்​பட்​டது தமிழகத்​தில்​தான். மேலும், இந்த ஆண்டு இது​வரை 27,90,093 பள்ளி மாணவர்​களுக்கு கண் பரிசோதனை​கள் செய்​யப்​பட்​டு, 2,00,214 கண் குறை​பாடு​கள் இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது.

மீத​முள்ள குழந்​தைகளுக்​கும் பரிசோதனை​கள் செய்​யப்​பட்​டு, இந்த ஆண்டு இறு​திக்​குள் சுமார் 3 லட்சம் பள்ளி மாணவர்​களுக்கு கண் கண்​ணாடிகள் வழங்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

திரு​வல்​லிக்​கேணி அரசு தாய் ​சேய் நல மருத்​து​வ​மனை​யில் லஞ்​சம் வாங்​கிய 9 ஒப்​பந்த பணி​யாளர்​கள் பணிநீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். 4 மருத்​துவ பணி​யாளர்​கள் பணி இடைநீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். 4 செவிலியர்​களிடம் விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது என்றார்.