விஜய்யால் திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது: மு.வீரபாண்டியன் கருத்து

விஜய்யால் திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது: மு.வீரபாண்டியன் கருத்து

“இந்​தத் தேர்​தலில் தவெக தலை​வர் விஜய் தாக்​கத்தை ஏற்​படுத்​தி​னாலும், திமுக கூட்​ட​ணி​யின் வெற்​றியை தடுத்து நிறுத்த முடி​யாது” என்று இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் கூறி​னார்.

புதுக்​கோட்டை மாவட்​டம் அறந்​தாங்​கி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர் கூறிய​தாவது: பிஹார் தேர்​தலில் வாக்கு திருட்​டு, தேர்​தல் விதி​மீறல்​கள் நடந்​துள்​ளன. இந்த விவ​காரத்​தில் தேர்​தல் ஆணை​ய​மும், மத்​திய அரசும் கைகோத்​துள்​ளன. எஸ்​ஐஆர் பணியை வரு​வாய் துறை அலு​வலர்​கள் புறக்​கணித்து இருப்​பதும், பழைய ஓய்​வூ​தி​யம் வேண்​டும் என வலி​யுறுத்தி ஜாக்​டோ- ஜியோ போராட்​டம் அறி​வித்​துள்​ளதும் நியாய​மானது​தான். இதே​போல, திமுக தனது தேர்​தல் வாக்​குறு​தி​களை​யும் முழு​மை​யாக நிறை​வேற்ற வேண்​டும்.