ஒரு வாரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பு! கிருஷ்ணசாமி பேட்டி

ஒரு வாரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பு! கிருஷ்ணசாமி பேட்டி

"ஒரு வார காலத்துக்குள் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிவிப்போம். இதுவரை எங்களை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்பதை பற்றி கவலையில்லை" என கோவையில் மருத்துவர் க.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் க.கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “வரும் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக ஒரு சில கருத்துகளை தெளிவுபடுத்தவே உங்களை சந்தித்துள்ளேன். மதுரை மாநாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வியூகத்தை அமைத்துள்ளோம்.

கூட்டணி குறித்து புதிய தமிழகம் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், ஒரு வார காலத்துக்குள் நிலைப்பாட்டை அறிவிப்போம். யாருடன் கூட்டணி என்பது குறித்து கலந்து பேசி வருகின்றோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கொள்கை ரீதியான ஆட்சி அமைக்கும் வகையில் திட்டங்களை வகுத்து வருகிறோம். மதுவிலக்கு, ஊழல், கனிமள கொள்ளை, அரசு வேலைக்கு விலை என தமிழ்நாட்டின் நிலைமை மாறி உள்ளது.

புதிய தமிழகத்தின் மதுரை மாநாட்டின் 13-வது தீர்மானமான குறைந்தபட்ச திட்ட அம்சங்களோடு அமைச்சரவையில் பங்களிக்கும் கூட்டணி ஆட்சி மலர்ந்திட அனைத்து தமிழ் மக்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற நிலைபாட்டில் இருந்து நாங்கள் விலகவில்லை. தமிழ்நாட்டில் புதிய தமிழகம் இன்றி, வெற்றி பெற முடியாத சூழ்நிலையில், தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் வலுவாக உள்ளோம்.