வெனிசுலா | இடைக்கால அதிபராக பொறுப்பேற்க துணை அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

வெனிசுலா | இடைக்கால அதிபராக பொறுப்பேற்க துணை அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

 வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்-கை இடைக்கால அதிபராக பொறுப்பேற்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு தலைமை தாங்குவதாகவும், அங்கிருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் ஏராளமாக நுழைவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். வெனிசுலாவுக்கு பொருளாதார தடை விதித்தார்.

இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவில், “வெனிசுலா மற்றும் அதன் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. நிக்கோலஸ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் சிறைபிடிக்கப்பட்டு, நாட்டுக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்டஅமலாக்கத் துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும்" என்று கூறினார்.

இந்நிலையில், தொலைக்காட்சியில் உரையாற்றிய வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக், நிகோலஸ் மதுரோதான் நாட்டின் அதிபர். அவர்தான் நாட்டின் ஒரே அதிபர். அவரை அமெரிக்க உடனடியாக விடுவிக்க வேண்டும் என தெரிவித்தார்.