ட்ரம்ப் - மோடி இடையிலான நட்பு உண்மையானது: அமெரிக்க தூதர் செர்கியோ கோர் விவரிப்பு

ட்ரம்ப் - மோடி இடையிலான நட்பு உண்மையானது: அமெரிக்க தூதர் செர்கியோ கோர் விவரிப்பு

இந்​தி​யா​வை​விட முக்​கிய​மான நட்பு நாடு வேறு எதுவும் இல்லை என்​று இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்கியோ கோர் தெரி​வித்​துள்​ளார்ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை இந்​தியா குறைத்​துக் கொள்ள வேண்​டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலி​யுறுத்​தி​னார். இதை ஏற்க மறுத்த நிலையில், இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்தது. இதனால் இரு நாடு​களுக்​கு இடையி​லான உறவில் விரிசல் ஏற்​பட்​டுள்​ளது. குறிப்​பாக, அதிபர் ட்ரம்பை சந்​திப்​பதை பிரதமர் மோடி தவிர்த்து வரு​கிறார்.

இரு நாடு​களுக்​கும் இடையி​லான உறவை அடுத்​த கட்​டத்​துக்கு கொண்டு செல்​வதே எனது நியமனத்​தின் நோக்​கம். மேலும் அடுத்த ஆண்டில் ட்ரம்ப் இந்​தி​யா​வுக்கு வரு​வார் என்று நம்புகிறேன். இந்​தி​யாவை விட முக்​கிய​மான நட்பு நாடு வேறு எதுவும் இல்​லை. இந்​தியா உலகின் மிகப்​பெரிய நாடு (மக்​கள் தொகை​யில்).

எனவே, இரு நாடு​களுக்​கு இடையி​லான தாராள வர்த்தக ஒப்​பந்​தத்தை வெற்​றிகர​மாக முடிப்​பது எளி​தான காரி​யம் அல்ல. இருப்பினும், இந்த ஒப்​பந்​தத்தை வெற்​றிகர​மாக இறு​திக் ​கட்டத்துக்கு கொண்டு செல்​வ​தில் இரு நாடு​களும் உறு​தி​யாக உள்ளன. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.