யு-19 ஆசிய கோப்பையில் ஆயுஷ் மாத்ரே கேப்டன்
யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் வரும் டிசம்பர் 12 முதல் 21 வரை நடைபெறுகிறது. 50 ஓவர் வடிவிலான இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ் மாத்ரே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கு தயாராகும் வகையில் ஆசிய கோப்பை தொடரை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ளக்கூடும்.