“வாக்காளர் திருத்தம்; ஊழியர்களுக்கு பணிச்சுமை இல்லை” - பிரேமலதா கருத்து

“வாக்காளர் திருத்தம்; ஊழியர்களுக்கு பணிச்சுமை இல்லை” - பிரேமலதா கருத்து

சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூரில் செய்​தி​யாளர்​களிடம் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா நேற்று கூறிய​தாவது: மதுரை, கோவை போன்ற மாநக​ராட்​சிப் பகு​தி​களில் மெட்ரோ ரயில் திட்​டத்தை கட்​டா​யம் செயல்​படுத்த வேண்​டும். அதே​போல, கூடு​தல் எண்​ணிக்​கை​யில் வந்தே பாரத் ரயில்​களை​யும் மத்​திய அரசு இயக்க வேண்​டும்.

வாக்கு திருட்டு எங்​கும் நடை​பெறக் கூடாது. ஜனநாயக நாட்​டில் ஒவ்​வொரு​வருக்​கும் வாக்​களிக்​கும் உரிமை உண்​டு. யாருடைய வாக்​குரிமை​யை​யும் மறுக்​கக் கூடாது. ஆரம்ப கட்​டத்​தில் பணியை முறைப்​படுத்​தாத​தால், வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​யில் ஈடு​பட்​டோருக்கு பணிச்​சுமை இருப்​ப​தாக புகார் எழுந்​தது. தற்​போது அதை முறைப்​படுத்​தி​விட்​ட​தால் பணிச்​சுமை எது​வுமில்​லை.

சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம். தேமுதிக இடம் பெற்றுள்ள கூட்டணி தான் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும். தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கத்தால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்​வாறு பிரேமலதா கூறி​னார்.