அடுத்த நிதியாண்டில் 6 வழித்தடங்களில் 130 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க நடவடிக்கை: தெற்கு ரயில்வே

அடுத்த நிதியாண்டில் 6 வழித்தடங்களில் 130 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க நடவடிக்கை: தெற்கு ரயில்வே

 அடுத்த நிதி​யாண்​டில், சென்னை எழும்​பூர் - விழுப்​புரம் உட்பட 6 வழித்தடங்​களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்​தில் ரயில்​களை இயக்க பணி​கள் மேற்​கொள்​ளப்​படும் என்​று, தெற்கு ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

தமிழகத்​தில் உள்ள முக்​கிய வழித்​தடங்​களில், ரயில்​களின் வேகத்தை அதி​கரிக்க தெற்கு ரயில்வே தீவிர நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. இதற்​காக, கூடு​தல் பாதை அமைப்​பது, வளைவு​களை அகற்​று​வது, சிக்​னல் தொழில்​நுட்​பத்தை மேம்​படுத்​து​வது உட்பட பல பணி​கள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

இதற்​கிடை​யில், சென்னை சென்ட்​ரல் - கோயம்​புத்​தூர் வழித்​தடத்​தில், ஜோலார்​பேட்டை - கோயம்​புத்​தூர் வரை பாதையை மேம்​படுத்​தும் பணி நடை​பெற்று வந்​தது. இப்​பணி முடிந்​ததைத் தொடர்ந்​து, ஜோலார்​பேட்டை - கோயம்​புத்​தூர் (286 கி.மீ) மார்க்​கத்​தில் அதிவேக ரயில் சோதனை ஓட்​டம் அண்​மை​யில் நடை​பெற்​றது. அப்​போது, 145 கி.மீ. வேகத்​தில் ரயிலை இயக்கி சோதிக்​கப்​பட்​டது.

தெற்கு ரயில்​வே​யில் கடந்த 3 ஆண்​டு​களில், 2,794 கி.மீ தொலை​வுக்கு ரயில் பாதைகள் தரம் உயர்த்​தப்​பட்​டு, மணிக்கு 110 கி.மீ வேகத்​தில் ரயில்​கள் இயக்கப்படுகின்றன.

வரும் 2026-27-ம் நிதி​யாண்​டில், சென்னை எழும்​பூர் - விழுப்​புரம், விழுப்​புரம் - விருத்​தாசலம், விருத்​தாசலம் - திருச்​சி, கொல்​லம் - திரு​வனந்​த​புரம், சொரனூர் - கண்​ணூர், கண்​ணூர் - மங்​களூர் ஆகிய 6 வழித்​தடங்​களில் 711 கி.மீ. தொலை​வுக்கு மணிக்கு 130 கி.மீ. வரை வேகத்​தில் ரயில்​களை இயக்க பணி​கள் மேற்​கொள்​ளப்​படும். இதற்​காக, ரயில் பாதை, தானி​யங்கி சிக்​னல் முறை தரம் உயர்த்​தப்​படும். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்​.