கூடங்குளத்தில் பொங்கல் விளையாட்டு விழா... அதிமுக முன்னாள் எம்பி தொடங்கி வைத்தார்

கூடங்குளத்தில் பொங்கல் விளையாட்டு விழா... அதிமுக முன்னாள் எம்பி தொடங்கி வைத்தார்
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவை அதிமுக முன்னாள் எம்பியும்,  நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக பொருளாளருமான சௌந்தரராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
கூடங்குளத்தில் சாமி விவேகானந்த மன்றம் சார்பில்  52 வது ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா 3 நாள்கள் நடைபெறுகிறது. இந்த விழாவை சௌந்தரராஜன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். முன்னதாக பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அந்தோணி அமலராஜா,
 திருநெல்வேலி புறநகர் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர்  சுரேஷ் குமார், 
 ராதாபுரம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் தலைவர், செல்வராஜேஷ், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணை தலைவர் குமரேசன், சுவாமி விவேகானந்ததா மன்ற தலைவர் பிரதிப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.