சண்டிகருக்கு தனி நிர்வாக அதிகாரியை நியமிக்க கடும் எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் இல்லை

சண்டிகருக்கு தனி நிர்வாக அதிகாரியை நியமிக்க கடும் எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் இல்லை

சண்​டிகர் யூனியன் பிரதேசத்​துக்கு தனி நிர்​வாக அதி​காரியை நியமிக்​கும் மத்​திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்​ளது. இந்​நிலை​யில் இது தொடர்​பாக இன்​னும் இறுதி முடிவு எடுக்​கப்​பட​வில்லை என மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

சண்​டிகர் யூனியன் பிரதேச​மாக இருந்​தா​லும், பஞ்​சாப் மற்​றும் ஹரி​யானா மாநிலங்​களின் தலைநகர​மாக​வும் விளங்​கு​கிறது. அதே​நேரம், பஞ்​சாப் ஆளுநர் சண்​டிகர் யூனியன் பிரதேசத்​தின் நிர்​வாக அதி​காரி​யாக​வும் செயல்​பட்டு வரு​கிறார்.

இந்​நிலை​யில், மத்​திய அரசின் இந்த முடிவுக்கு பஞ்​சாபில் ஆளும் ஆம் ஆத்​மி, காங்​கிரஸ், ஷிரோமணி அகாலி தளம் உள்​ளிட்ட கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன.

இது​போல அகாலி தளம் கட்​சி​யின் மூத்த தலை​வர் ஹர்​சிம்​ரத் கவுர் பாதல் கூறும்​போது, “எந்த ஒரு சர்​வா​தி​காரி முன்​பும் பஞ்​சாபியர்​கள் தலை​வணங்க மாட்​டார்​கள் என்​பதை வரலாறு சொல்​லும். சண்​டிகர் பஞ்​சாப் மாநிலத்​துக்கு சொந்​த​மானது’’ என்​றார்.

அதே​நேரம் சண்​டிகரின் பாரம்​பரிய நிர்​வாக கட்​டமைப்பை மாற்​றும் நோக்​கம் இல்​லை. சண்​டிகரின் நலனை கருத்​தில் கொண்டு சம்​பந்​தப்​பட்ட அனை​வருட​னும் ஆலோ​சனை நடத்​திய பிறகே இறுதி முடிவு எடுக்​கப்​படும். வரும் நா​டாளு​மன்ற கூட்​டத் தொடரில் இது தொடர்​பாக எந்த மசோ​தா​வும் தாக்​கல் செய்​யப்​பட மாட்​டாது’’ என கூறப்​பட்​டுள்​ளது.