பிஹாரில் புதிய எம்எல்ஏ.க்கள் பதவியேற்பு

பிஹாரில் புதிய எம்எல்ஏ.க்கள் பதவியேற்பு

பிஹார் சட்​டப்பேரவை தேர்​தலில் தே.ஜ. கூட்​டணி 202 இடங்​களில் வெற்றி பெற்று மீண்​டும் ஆட்​சியை பிடித்​தது. ராஷ்ட்​ரிய ஜனதா தளம் தலை​மையி​லான மெகா கூட்​டணி 35 இடங்​களில் வென்​றது. பிஹாரில் 10-வது முறை​யாக நிதிஷ் குமார் முதல்​வ​ராக பதவி​யேற்​றார்.

புதிய அரசு ஆட்சி அமைத்​ததை முன்​னிட்டு 5 நாள் சட்​டப்​பேரவை கூட்​டம் நேற்று தொடங்​கியது. புதி​தாக தேர்வு செய்​யப்​பட்ட 243 உறுப்​பினர்​களுக்கு இடைக்​கால சபா​நாயகர் நரேந்​திர நாராயண் யாதவ் பதவிப் பிர​மாணம் செய்து வைத்​தார். சட்​டப்​பேர​வை​யில் சபா​நாயகர் தேர்வு இன்று நடை​பெறும்.