கொட்டும் கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

கொட்டும் கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தென்மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 24) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மதுரை, கடலூர், நாகப்பட்டினமை், கரூர், விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.