கடும் பனி மூட்டம்: 4வது டி20 போட்டி கைவிடப்பட்டது

கடும் பனி மூட்டம்: 4வது டி20 போட்டி கைவிடப்பட்டது

லக்னோவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான 4வது டி20 கிரிக்கெட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமலேயே கைவிடப்பட்டது.

ஏற்கெனவே நடந்த 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும், ஒரு போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், 4வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் நடைபெற இருந்தது.

ஆனால் லக்னோவில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் போட்டித் தொடங்குவது தொடர்ந்து தாமதமாகி வந்தது.

மைதானத்தில் 2 முறை ஆய்வு செய்து பார்த்த நடுவர்கள், நிலைமை சீராகாததை அடுத்து 4வது டி20 போட்டி கைவிடப்படுவதாக தெரிவித்தனர்.

இரு அணிகள் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி, வரும் 19-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா வென்றால், தொடரை வெல்லும். தென்னாப்பிரிக்க வென்றால் டி20 போட்டித் தொடர் சமனில் முடிவடையும்.

Share.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

© மேலும் இதில் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த punnagaiseithi.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.