பிரதமர் மோடி வருகையை எதிர்த்து கருப்பு கொடி​ போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது

பிரதமர் மோடி வருகையை எதிர்த்து கருப்பு கொடி​ போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது

கிராமப்​புறங்​களில் செயல்​படுத்​தப்​பட்டு வரும் 100 நாள் வேலை உறுதி திட்​டத்​தின் பெயரை மாற்​றியது மற்​றும் அதில் இருந்த மகாத்மா காந்​தி​யின் பெயரை நீக்​கியதை கண்​டித்து தமிழ்​நாடு காங்​கிரஸ் சார்​பில் பல்​வேறு போராட்​டங்​கள் நடத்து வரு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதி​ராக கருப்பு கொடி காட்டி போராட்​டம் நடத்த இருப்​ப​தாக காங்​கிரஸ் அறி​வித்​திருந்​தது. அதனைத் தொடர்ந்து நேற்​று​முன்​தினம் இரவு, முன்​னாள் எம்பி பெ.​விஸ்​வ​நாதன் தலை​மை​யில் காங்​கிரஸார் மது​ராந்​தகத்​தில் கூடி தீப்​பந்​தம் ஏற்றி எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

அவர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். தமிழ்​நாடு காங்​கிரஸ் எஸ்சி அணி தலை​வர் ரஞ்​சன்​கு​மாரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் வீட்டு காவலில் வைத்​தனர். இந்​நிலை​யில், அவர் தனது வீட்டு மாடி​யில் மோடியே, திரும்பி செல் என்ற வாசகம் இடம்​பெற்ற பலூனை பறக்​க​விட்​டார்.

இதன் தொடர்ச்​சி​யாக, மாவட்ட தலை​வர் ஜெ.டில்​லி​பாபு தலை​மை​யில் பெரியமேடு பகு​தி​யில் கருப்பு உடை அணிந்​து, கருப்பு கொடி ஏந்​தி, கருப்பு பலூன்​களு​டன் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்ட காங்​கிரஸாரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

மேலும், பர்​கிட் சாலை பெரி​யார் சிலை அரு​கிலும் கருப்பு கொடி காட்​டிய காங்​கிரஸார், டில்லி பாபு​வின் வட சென்​னை​யில் உள்ள அலு​வல​கம் முன்பு கருப்பு கொடி​யுடன் கூடிய காங்​கிரஸாரை போலீ​ஸார்​ கைது செய்​து, பின்​னர்​ மாலையில் விடுவித்தனர்.