வீட்டு பணிப் பெண்ணை ஏமாற்றியதாக இந்தி நடிகர் கைது

வீட்டு பணிப் பெண்ணை ஏமாற்றியதாக இந்தி நடிகர் கைது

திரு​மணம் செய்​வ​தாகக் கூறி ஏமாற்​றிய​தாக வீட்டு பணிப் பெண் அளித்த புகாரை அடுத்​து, இந்தி நடிகர் நதீம் கான் கைது செய்யப்பட்டுள்​ளார்.

இந்​தி​யில் பல்​வேறு படங்​களில் நடித்​துள்ள நதீம் கான், சமீபத்​தில் வெளி​யாகி வெற்றி பெற்ற ‘துரந்​தர்’ படத்​தி​லும் நடித்​துள்​ளார். பல்வேறு நடிகர்​களின் வீட்​டில் பணிபுரி​யும் 41 வயது பெண்​ணுடன் நதீம் கானுக்கு 2015-ம் ஆண்டு பழக்​கம் ஏற்​பட்​டது. தொழில்​முறையில் முதலில் அவர்​கள் பழகினர். பின்​னர் அவரை திருமணம் செய்​து​ கொள்​வ​தாக நதீம் கான் உறு​தி​யளித்​ததை அடுத்து நெருங்கி பழகினர்.

இந்நிலையில் கடந்த 10 வருட​மாகத் தன்னை பாலியல் ரீதி​யாகத் துன்​புறுத்​தி​விட்​டு, தற்​போது திரு​மணம் செய்ய மறுப்​ப​தாக நடிகர் நதீம் கான் மீது, அப்​பெண் மும்பை மால்​வானி போலீ​ஸில் புகார் அளித்​தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீ​ஸார் விசாரணை நடத்தி வரு​கின்​றனர். இது பாலிவுட்​டில் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தி இருக்​கிறது.