‘காந்தாரா’வை பணத்துக்காக மட்டுமே உருவாக்கவில்லை: நடிகர் ரிஷப் ஷெட்டி தகவல்

‘காந்தாரா’வை பணத்துக்காக மட்டுமே உருவாக்கவில்லை: நடிகர் ரிஷப் ஷெட்டி தகவல்

‘காந்​தா​ரா’, ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படங்​களை இயக்​கி, நாயக​னாக நடித்​தவர் ரிஷப் ஷெட்​டி. கன்​னடத்​தில் உரு​வான இப்​படங்​கள் மற்ற மொழிகளி​லும் வரவேற்​பைப் பெற்​ற​தால், இந்​தியா முழு​வதும் பிரபல​மா​னார்.

‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். அடுத்து ஜெய் ஹனுமான் என்ற படத்​தில் ஹனு​மானாக நடிக்க இருக்​கிறார் ரிஷப் ஷெட்​டி. இதற்​கிடையே ‘காந்​தா​ரா’ படத்தை வெறும் பணத்​துக்​காக மட்​டும் உரு​வாக்​க​வில்லை என்று தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறும்​போது, “இதுபோன்ற கதையை வெறும் பணத்​துக்​காக மட்​டும் செய்​து​விட முடி​யாது. நான் வேறு கதைகளைத் தேர்வு செய்​திருந்​தால் ரிஸ்க் எடுப்​ப​தைத் தவிர்த்​திருப்​பேன். ‘காந்​தா​ரா’வை மொழி மற்​றும் கலாச்​சார வேறு​பாடு​களைக் கடந்து பார்​வை​யாளர்​கள் அதி​கம் பேசி​ய​போது, இந்​தக் கதையை நியா​யத்​துடன் முடிக்க வேண்​டும் என்று நினைத்​தேன்.

‘காந்​தா​ரா’​வின் முன் கதையைச் சொல்​வதன் மூலம் அந்​தப் படத்​துக்கு நியா​யம் செய்ய முடி​யும் என்று நம்​பினேன். பின்​னர் தெய்வீக தலை​யீட்​டால் ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படத்தை இயக்​கினேன். உண்​மை​யைச் சொன்​னால், ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படத்தை முடிக்​கும் வரை வேறு பணி​களில் கவனம் செலுத்த வேண்​டாம் என்று நினைத்​தேன். அப்​போது ‘ஜெய் ஹனு​மான்’ வாய்ப்பு வந்​த​தால் ஏற்றுக் கொண்​டேன்.

அந்​தக் கதை என்னை விரட்​டிக் கொண்டு வந்​தது. மறுக்க முடிய​வில்​லை. புராணங்கள், வரலாற்​றுப் பின்​னணி கதைகள் மீது எனக்கு ஆர்​வம் இருப்​ப​தால் ஒப்​புக் கொண்​டேன். ஒரு நடிக​ராகவோ அல்​லது இயக்​குந​ராகவோ ஒரே பாணி​யில் ஒட்​டிக்​கொண்​டிருக்க முடி​யாது. மாறு​பட்ட கதா​பாத்​திரங்​களில் நடிக்க வேண்​டும்​ என நினைக்​கிறேன்​” என்​றார்​.