சென்யார் புயல்: இந்தோனேசியா, தாய்லாந்தில் 557 பேர் உயிரிழப்பு

சென்யார் புயல்: இந்தோனேசியா, தாய்லாந்தில் 557 பேர் உயிரிழப்பு

சென்​யார் புயல் காரண​மாக இந்​தோ​னேசி​யா​வில் 294 பேரும், தாய்​லாந்​தில் 263 பேரும் உயி​ரிழந்​துள்​ளனர். இரு நாடு​களி​லும் இது​வரை 557 பேர் உயி​ரிழந்து உள்​ளனர்.

மலாக்கா ஜலசந்தி பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் சென்​யார் புய​லாக வலுப்​பெற்று கடந்த 26-ம் தேதி இந்​தோ​னேசி​யா​வின் வடக்கு சுமத்ரா பகு​தி​யில் கரையைக் கடந்​தது. இதன்​காரண​மாக அங்கு கனமழை பெய்​து, பல்​வேறு இடங்​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டது.

குறிப்​பாக வடக்கு சுமத்​ரா, மேற்கு சுமத்​ரா, அச்சே மாகாணங்​களில் இது​வரை 294 பேர் உயி​ரிழந்து உள்​ளனர். 620 பேர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். காட்​டாற்று வெள்​ளம், நிலச்​சரிவு ஏற்​பட்ட பகு​தி​களில் 290 பேரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது. சுமார் 29,000 பேர் நிவாரண முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்டு உள்​ளனர். சுமார் 3.11 பில்​லியன் டாலர் அளவுக்கு பொருட்​சேதம் ஏற்​பட்​டிருக்​கிறது. புய​லால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் இயல்பு நிலை திரும்ப பல வாரங்​கள் ஆகும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

புயல் காரண​மாக தாய்​லாந்து நாட்​டின் 14 மாகாணங்​களில் பெரும் பாதிப்​பு​கள் ஏற்​பட்டு உள்​ளன. அந்த நாட்​டில் இது​வரை 263 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மலேசி​யா​வின் 10 மாகாணங்​களில் சென்​யார் புய​லால் பாதிப்​பு​கள் ஏற்​பட்டு உள்​ளன. அந்த நாட்​டில் 21,000 பேர் பாது​காப்​பான இடங்​களில் தஞ்​சமடைந்​துள்​ளனர். 2 பேர் உயி​ரிழந்து உள்​ளனர். சென்​யார் புய​லால் இந்​தோ​னேசி​யா, தாய்​லாந்து நாடு​களில் மட்​டும் 557 பேர்​ உயி​ரிழந்​துள்​ளனர்​.