‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கில் ஜன.27-ல் தீர்ப்பு
நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பியது.
இதை எதிர்த்து படத்தயாரிப்பு குழு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து, உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இதற்கிடையே இடைக்காலத்தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து படத்தயாரிப்பு குழு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதையேற்க மறுத்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வையே நாட உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் கடந்த 20-ம் தேதி விசாரணைக்கு வந்தது.