வங்கதேசத்தில் வரும் காலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்: நிபுணர்கள் எச்சரிக்கை

வங்கதேசத்தில் வரும் காலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்: நிபுணர்கள் எச்சரிக்கை

வங்​க தேசத்​தில் வெள்​ளிக்​கிழமை காலை கடுமை​யான நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இது, ரிக்​டர் அளவு​கோலில் 5.7-ஆக பதிவானது.

தலைநகர் டாக்கா உட்பட வங்​கதேசத்​தின் மத்​திய பகு​தி​களில் இந்த நிலநடுக்​கத்​தின் பாதிப்​பால் கட்​டிடங்​கள் இடிந்து விழுந்தன. இதில் 10 பேர் உயி​ரிழந்​தனர். வெள்​ளிக்​கிழமையை தொடர்ந்து சனிக்​கிழமை​யும் 3 முறை லேசான அதிர்​வு​கள் உணரப்​பட்​டன.

தி டெய்லி ஸ்டார் நேற்று வெளி​யிட்ட செய்​தி​யில், “நிலநடுக்கத்தில் 14 கட்​டிடங்​கள் சேதமடைந்​துள்​ளதை டாக்கா மாவட்ட நிர்​வாகம் உறு​திப்​படுத்​தி​யுள்​ளது. பாதிப்​பு​கள் குறித்து தொடர்ந்து கணக்​கெடுக்​கப்​பட்டு வரு​கிறது. இதையடுத்​து, பாதிப்பு எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது" என்​று தெரி​வித்​துள்​ளது.

ADVERTISEMENT
HinduTamil10thNov