சுனாமி நினைவு தினம்... கடலில் பால் ஊற்றி அஞ்சலி

சுனாமி நினைவு தினம்... கடலில் பால் ஊற்றி அஞ்சலி
நெல்லை மாவட்டம் தோமையார்புர மீனவ கிராமத்தில் 21 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சௌந்தரராஜன் தலைமையில் கடற்கரையில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
2004 ஆம் ஆண்டு  டிசம்பர் 26-ம் தேதி சுனாமி ஆழிப் பேரலை தாக்கியதில் கடலோர மாவட்டங்களில் வசித்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவத்தின் 21 ஆம்ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் கடலில் பால் ஊற்றியும் மலர் தூவையும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் தோமையார்புரம் கடற்கரை கிராமத்தில் அதிமுக மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியம் ஏற்பாட்டில், கிழக்கு ஒன்றிய செயலாளர் KPK.செல்வராஜ் முன்னிலையில் முன்னாள் எம்பியும் மாவட்ட பொருளாளருமான சௌந்தரராஜன் தலைமையில் தோமையார்புரம் கடலில் பால் ஊற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னதாக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜெபம் செய்தனர்.