தனி விமானம் மூலம் பீகார் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#tamilnadu #mkstalin #rahugandhi

தனி விமானம் மூலம் பீகார் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

'வாக்கு திருட்டு' விழிப்புணர்வு: ராகுல் காந்தி நடைபயணத்தில் பங்கேற்க பீகார் புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்.

வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். தர்பங்காவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுலுடன் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். 

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். 

இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். 

'வாக்கு திருட்டு' தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வரும் கடந்த 17-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். 

தர்பங்காவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுலுடன் பங்கேற்று பேசுவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்று முந்தானை விமானத்தில் பீகார் புறப்பட்டுச் சென்றார்.