உ.பி.யில் 10 நாட்களில் 20 என்கவுன்ட்டர்: ‘ஆபரேஷன் லங்கடா’ நடவடிக்கையில் 10 பேர் உயிரிழப்பு

உ.பி.யில் 10 நாட்களில் 20 என்கவுன்ட்டர்: ‘ஆபரேஷன் லங்கடா’ நடவடிக்கையில் 10 பேர் உயிரிழப்பு

உ.பி.​யில் குற்​றச்​செயல்​கள் அதி​கம் நிகழ்​கின்​றன. இங்கு பாஜக​வின் யோகி ஆதித்​ய​நாத் ஆட்​சிப் பொறுப்​பேற்​றது முதல் குற்​ற​வாளி​களுக்கு எதி​ராக என்​க​வுன்ட்​டர் உள்​ளிட்ட கடும் நடவடிக்கை எடுத்து வரு​கிறார்.

தற்​போது ‘ஆபரேஷன் லங்​க​டா’ எனும் பெயரில் முக்​கிய குற்​ற​வாளி​களை பிடிக்​கும் பணி தொடங்​கி​யுள்​ளது. இந்​நிலை​யில் கடந்த 10 நாட்​களில் நடை​பெற்ற 20 என்​க​வுன்ட்​டர்​களில் 10 முக்​கிய குற்​ற​வாளி​கள் கொல்​லப்​பட்​டுள்​ளனர். பலர் காயம் அடைந்​துள்​ளனர்.

கொல்​லப்​பட்​ட​வர் பட்​டியலில் ரூ.2.5 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்ட வினீத் பாட்​டி, ரூ.1 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்ட இப்​த​கார், இம்​ரான், அர்ஷத், நயீம் ஆகியோ​ரும் உள்​ளனர்.

உ.பி.​யின் கவு​சாம்பி மாவட்​டத்​தில் 3 நாட்​களுக்கு முன் புது​மணப் பெண் ஒரு​வர் கழுத்து அறுத்து கொல்​லப்​பட்​டார். இந்த கொடூர சம்​பவத்​தில் 48 மணி நேரத்​தில் அவரது காதலன் பால்​வீர் காலில் சுடப்​பட்டு கைது செய்​யப்​பட்​டார்.

ராபர்ட்​ஸ்​கஞ்ச் மாவட்​டத்​தில் கடந்த 8-ம் தேதி ஒரு பெண்​ணிடம் கொள்​ளை​யடித்து அவரை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக 3 பேர் மீது குற்​றம் சாட்​டப்​பட்​டது. மறு​நாள் இந்த மூவரும் என்​க​வுன்ட்​டரில் கைது செய்​யப்​பட்​டனர்.

அவுரை​யா​வில் ரூ.25,000 வெகுமதி அறிவிக்​கப்​பட்​டிருந்த ராஜ்னேஷ் கைது செய்​யப்​பட்​டார். இவர் மீது கொலை மற்​றும் கொலை முயற்சி வழக்​கு​கள் உள்​ளன.

பரேலி​யில் ரூ.1 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்ட காஸ்​கஞ்​சின் இப்​த​கார், கடந்த 8-ம் தேதி என்​க​வுன்ட்​டரில் கொல்​லப்​பட்​டார். இவரது மரணம் குற்​ற​வாளி​கள் மத்​தி​யில் அச்​சத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. என்​க​வுன்ட்​டர் படங்​கள் வெளி​யான பிறகு, சஹாரன்​பூர் துப்​பாக்​கிச் சூட்​டில் குற்​றம் சாட்​டப்​பட்ட பிர​சாந்த் குமார் காவல் நிலை​யம் வந்து சரண் அடைந்​தார். கடந்த 8 ஆண்​டு​களில் உ.பி. காவல்​துறை 14,973 என்​க​வுன்ட்​டர்​களை நடத்​தி​யுள்​ளது. இதில் 239 பேர் கொல்​லப்​பட்​டுள்​ளனர்.