கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறை மாநிலங்களவை எம்.பி.க்களை இழக்கும் ஆர்ஜேடி
பிஹார் தேர்தல் தோல்வியை அடுத்து, வரும் 2030-ம் ஆண்டுக்குள் மாநிலங்களவையில் ஒரு எம்.பி. கூட இல்லாத கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் மாறப் போகிறது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் என்டிஏ (ஐஜத - பாஜக) கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மெகா கூட்டணி (ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ்) படுதோல்வி அடைந்தது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த தோல்வி மாநிலங்களவை தேர்தலில் ஆர்ஜேடிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. வரும் 2030-ம் ஆண்டு பிஹாரில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். அதற்கு முன்னதாக தற்போது ஆர்ஜேடி கட்சியில் உள்ள 5 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலமும் முடிந்துவிடும். அதன்பிறகு 30 ஆண்டு கட்சி வரலாற்றில் மாநிலங்களவையில் ஒரு எம்.பி.கூட இல்லாத கட்சியாக ஆர்ஜேடி மாறும்.
ஆர்ஜேடியில் தற்போது மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள பிரேம் சந்த் குப்தா (ஆர்ஜேடி மாநிலங்களவை தலைவர்), ஏ.டி.சிங் ஆகியோரின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிகிறது. பையாஸ் அகமதுவின் பதவிக்காலம் 2028-ம் ஆண்டு ஜூலையில் முடிகிறது. மனோஜ் குமார் ஜா, சஞ்சய் யாதவ் ஆகிய இருவரின் பதவிக் காலம் 2030-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிகிறது.
ஆர்ஜேடியில் தற்போது மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள பிரேம் சந்த் குப்தா (ஆர்ஜேடி மாநிலங்களவை தலைவர்), ஏ.டி.சிங் ஆகியோரின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிகிறது. பையாஸ் அகமதுவின் பதவிக்காலம் 2028-ம் ஆண்டு ஜூலையில் முடிகிறது. மனோஜ் குமார் ஜா, சஞ்சய் யாதவ் ஆகிய இருவரின் பதவிக் காலம் 2030-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிகிறது.