கூடங்குளம் அருகே குடியரசு தினவிழா... முன்னாள் எம்.பி. தேசியக் கொடியேற்றினார்

கூடங்குளம் அருகே குடியரசு தினவிழா... முன்னாள் எம்.பி. தேசியக் கொடியேற்றினார்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அதிமுக முன்னாள் எம்பியும்,  முன்னாள் பள்ளி மாணவருமான சௌந்தரராஜன் கொடியேற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், பொதுத்தேர்வில் நன்கு படித்து நூற்றுக்கு நூறு தேர்ச்சி பெறும் மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்வேன் என வாக்குறுதி அளித்தார். தொடர்ந்து நிகழ்ச்சி முடிவில் மாணவர்களுக்கு ஜிலேபி, கரும்புசாறு, பாப்கார்ன் போன்றவற்றை சௌந்தரராஜன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் டாக்டர் பேஸில் ககாரின், பள்ளி ஆசிரியர்கள், மாவட்ட அதிமுக மகளிர் அணி துணைத் தலைவி வசந்தி, முன்னாள் கவுன்சிலர் நம்பிராஜன், ராஜம், ராஜகுமார், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை தலைவர் குமரேசன், கிளை செயலாளர்கள் சுயம்புதுரை, ராஜதுரை, சக்திவேல் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லிங்கதுரை, முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.