முனம்பத்தின் 365 ஏக்கர் நிலம் வக்பு சொத்து கிடையாது: கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பால் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மகிழ்ச்சி

முனம்பத்தின் 365 ஏக்கர் நிலம் வக்பு சொத்து கிடையாது: கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பால் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மகிழ்ச்சி

கேரளா​வின் முனம்​பம் பகு​தி​யில் உள்ள 365 ஏக்​கர் நிலம். வக்பு வாரிய சொத்து கிடை​யாது என்று கேரள உயர் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்து உள்​ளது. இந்த தீர்ப்பை முனம்​பம் பகுதி மக்​கள் முழு​மனதோடு வரவேற்று உள்​ளனர்.

கேரளா​வின் கொச்சி நகரில் இருந்து 40 கி.மீ. தொலை​வில் முனம்​பம் பகுதி அமைந்​துள்​ளது. கடற்​கரை கிராம​மான அங்கு கத்​தோலிக்க கிறிஸ்​தவர்​கள், இந்​துக்​கள் பெரும்​பான்​மை​யாக வாழ்​கின்​றனர். மீன்​பிடித் தொழில், இறால் வளர்ப்பு ஆகியவை பிர​தான தொழிலாக உள்​ளது.
இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்​டில் முனம்​பம் பகு​தி​யின் 365 ஏக்​கர் நிலத்தை வக்பு சொத்​தாக கேரள வக்பு வாரி​யம் அறி​வித்​தது. இந்த அறி​விப்பை கேரள அரசு நிராகரித்​தது. இதுதொடர்​பாக அடுத்​தடுத்து பல்​வேறு நீதி​மன்​றங்​களில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன. முனம்பம் பகு​தியை சேர்ந்த சுமார் 600-க்​கும் மேற்​பட்ட குடும்​பங்​கள் வக்பு வாரி​யத்​துக்கு எதி​ராக போராட்​டங்​களை நடத்​தினர்.

இதுதொடர்​பான மேல்​முறை​யீட்டு வழக்கை கேரள உயர் நீதி​மன்​றத்​தின் ஒரு நீதிபதி அமர்வு விசா​ரித்து கடந்த மார்ச் 17-ம் தேதி தீர்ப்பு வழங்​கியது. அப்​போது முனம்​பம் பகுதி நிலம் வக்பு வாரி​யத்​துக்கு சொந்​த​மானது என்று தீர்ப்​பளிக்​கப்​பட்​டது. இதை எதிர்த்து கேரள அரசு சார்​பில் 2 மேல்​முறை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மனுக்​களை நீதிப​தி​கள் எஸ்​.ஏ.தர்​ம​தி​காரி, ஷியாம் குமார் அமர்வு விசா​ரித்து  தீர்ப்பு வழங்​கியது.

அதில் கூறி​யிருப்​ப​தாவது:

கடந்த 2019-ம் ஆண்​டில் முனம்​பம் பகுதி நிலம் வக்பு வாரிய சொத்​தாக அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த விவ​காரத்​தில் வக்பு வாரிய சட்ட விதி​கள் அப்​பட்​ட​மாக மீறப்​பட்டு உள்​ளன. கடந்த 1950-ம் ஆண்​டில் சித்​திக் என்​பவர் முனம்​பம் பகுதி நிலத்தை பருக் கல்​லூரிக்கு தான​மாக வழங்கி உள்​ளார். இது தானப் பத்​திரம் மட்​டுமே. இதை வக்பு சொத்​தாக கருத முடி​யாது.

சுமார் 70 ஆண்​டு​களுக்கு பிறகு முனம்​பம் பகுதி நிலத்தை வக்பு வாரி​யம் சொந்​தம் கொண்​டாடி உள்​ளது. இது நில அபகரிப்பு முயற்சி ஆகும். இதன்​மூலம் ஆயிரக்​கணக்​கான ஏழை மக்​களின் வாழ்​வா​தா​ரம் கேள்விக்​குறி​யாகி உள்​ளது. அவர்​களின் அடிப்​படை உரிமை​களை பறிக்க முயற்சி மேற்​கொள்​ளப்​பட்​டிருக்​கிறது. கடந்த மார்ச் மாதம் ஒரு நீதிபதி அமர்வு பிறப்​பித்த தீர்ப்பு ரத்து செய்​யப்​படு​கிறது. முனம்​பம் பகுதி நிலம் வக்பு வாரிய சொத்து கிடை​யாது.

முனம்​பம் பகுதி நிலப் பிரச்​சினை தொடர்​பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ராமச்​சந்​திரன் நாயர் கமிஷனை கேரள அரசு நியமித்​தது. அந்த கமிஷன் செயல்பட ஒரு நீதிபதி அமர்வு ரத்து செய்​தது. நீதிபதி ராமச்​சந்​திரன் நாயர் கமிஷன் மீண்​டும் செயல்​படலாம். இவ்​வாறு தீர்ப்​பில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

கேரள உயர் நீதி​மன்ற தீர்ப்பை முனம்​பம் பகுதி மக்​கள் முழு​மனதோடு வரவேற்று உள்​ளனர். கத்​தோலிக்க பாதிரி​யார் ஜோஷி கூறும்​போது, “முனம்​பம் பகுதி நிலத்தை அபகரிக்க வக்பு வாரி​யம் முயற்சி செய்​வ​தாக உயர் நீதி​மன்​றமே குற்​றம் சாட்டி உள்​ளது. உயர் நீதி​மன்ற தீர்ப்​பால் சுமார் 600 குடும்​பங்​கள் நிம்​மதி அடைந்​துள்​ளன" என்று தெரி​வித்​தார்.