திருவான்மியூர் - உத்தண்டி வரை 4 வழி மேம்பாலம் அமைக்கும் பணிக்கான டெண்டருக்கு இடைக்காலத் தடை

திருவான்மியூர் - உத்தண்டி வரை 4 வழி மேம்பாலம் அமைக்கும் பணிக்கான டெண்டருக்கு இடைக்காலத் தடை

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் - உத்தண்டி வரையிலான 4 வழி மேம்பாலம் மற்றும் 6 வழிச்சாலை விரிவாக்க பணிகளுக்கான டெண்டருக்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை கிழக்குகடற்கரை சாலையில் 4 வழிகள் கொண்ட மேம்பாலமும், அதன்பிறகு உள்ள கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுவதற்கான ஆன்லைன் டெண்டரை மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் கடந்த ஆக.25-ம் தேதி வெளியிட்டது.

ஆனால் தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்க பணிகளுக்கான டெண்டர், ஏற்கெனவே கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைத்துறை பணிகளை சரியாக செய்யாததால் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஜன.27 வரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என டெண்டருக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.