தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்தது
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் சரிந்துள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை அதிகரித்துவருகிறது. சில நேரங்களில் விலை குறைந்தாலும், மீண்டும உயர்ந்து விடுகிறது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.12,800-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 704-க்கு விற்கப்பட்டது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு ரூ.6 உயர்ந்து, ரூ.277-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.6 ஆயிரம் உயர்ந்து ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 12 , ஆயிரத்து 750 ரூபாய்க்கும் , சவரனுக்கு 400 குறைந்து 1 லட்சத்து 2 ஆயிரமாக விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாயும் கிலோவுக்கு 5 ஆயிரமும் குறைந்து விற்பனையாகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.