மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு

வீட்​டுக்​குள் இழுத்​துச் சென்று பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்​டுநரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். சென்னை தி.நகரைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்​கும் 14 வயது சிறுமி ஒரு​வர், நேற்று முன்​தினம் நந்​தனத்​தில் உள்ள சித்​தப்பா வீட்​டுக்கு சென்று விளை​யாடி​விட்டு தனது வீட்​டுக்கு புறப்​பட்​டார்.

அப்​போது நந்​தனத்​தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்​டுநர் நீல​கண்​டன் (25) என்​பவர் வலுக்​கட்​டாய​மாக அந்த சிறுமி​யின் கையைப் பிடித்​து, தனது வீட்​டுக்​குள் இழுத்​துச் சென்று காதலிப்​ப​தாக கூறியதுடன், 12-ம் வகுப்பு முடித்​தவுடன் சிறுமியை திரு​மணம் செய்​து​கொள்​வ​தாகக் கூறி பாலியல் துன்​புறுத்​தலில் ஈடு​பட்​டார்.

இதையடுத்து சிறுமி​யின் பெற்​றோர் இந்த விவ​காரம் தொடர்​பாக தேனாம்​பேட்டை மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். அதன்​படி போலீ​ஸார் ஆட்டோ ஓட்​டுநர் நீல​கண்​டன் மீது போக்சோ சட்​டப்​பிரி​வின் கீழ் வழக்​குப் பதிந்​து, தலைமறை​வாக உள்ள அவரைத் தேடி வரு​கின்​றனர்​.