உலகக் கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: இந்தியா - சவுதி அரேபியா பலப்பரீட்சை

உலகக் கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: இந்தியா - சவுதி அரேபியா பலப்பரீட்சை

சர்​வ​தேச கூடைப்​பந்து சம்​மேளனம் சார்​பில் உலகக் கோப்பை கூடைப்​பந்து போட்டி வரும் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 27 முதல் செப்​டம்​பர் 12 வரை கத்​தா​ரில் நடை​பெறுகிறது. இதில் மொத்​தம் 32 அணி​கள் கலந்து கொண்டு விளை​யாட உள்​ளன.

போட்​டியை நடத்​தும் நாடு என்ற வகை​யில் கத்​தார் அணி மட்​டும் நேரடி​யாக தகுதி பெற்​றுள்​ளது. மற்ற 31 அணி​களும் தகுதி சுற்றின் வாயி​லாக தேர்வு செய்​யப்பட உள்​ளன.

இதில் ஆசியா மற்றும் ஓசி​யானா பிரி​வில் இருந்து கத்​தாரை தவிர்த்து 7 அணி​கள் தகுதி பெறும். இந்​நிலை​யில் தகுதி சுற்று ஆட்​டங்​கள் கண்டங்கள் வாரி​யாக நடை​பெற்று வரு​கின்​றன. இந்த வகை​யில் ஆசியா மற்​றும் ஓசி​யானா பிரி​வில் மொத்​தம் 16 அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. இவை 4 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​திய அணி ‘டி’ பிரி​வில் உள்​ளது. இதே பிரி​வில் சவுதி அரேபி​யா, லெப​னான், கத்​தார் அணி​களும் உள்​ளன. ஒவ்​வொரு அணி​யும் தனது பிரி​வில் உள்ள மற்ற அணி​களு​டன் இரு முறை மோதும். இதில் முதல் 3 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் 2-வது கட்ட தகுதி சுற்​றுக்கு முன்​னேறும். இந்த வகை​யில் ஆசியா மற்​றும் ஓசியானா பிரி​வில் இருந்து 2-வது சுற்​றுக்கு மொத்​தம் 12 அணி​கள் தகுதி பெறும். இவை 2 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்டு போட்​டிகள் நடத்​தப்​படும்.

இதில் இரு பிரி​விலும் முதல் 3 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் என 6 அணி​களு​டன் 4-வது இடத்தை பிடிக்​கும் சிறந்த ஒரு அணி என மொத்​தம் 7 அணி​கள் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும். இந்​நிலை​யில் இந்​திய அணி தனது தகுதி சுற்​றின் முதல் ஆட்​டத்​தில் கடந்த 27-ம் தேதி சவுதி அரேபி​யா​வுடன் மோதி​யது. ரியாத்தில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் சவுதி அரேபியா 75–51 என்ற கணக்​கில் வெற்றி பெற்​றிருந்​தது.

இந்​நிலை​யில் இந்த இரு அணி​களும் மோதும் 2-வது ஆட்​டம் இன்று (நவ.30-ம் தேதி) மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளை​யாட்டு அரங்​கில் நடை​பெறுகிறது. இதுதொடர்​பான பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்பு நேற்று சென்​னை​யில் நடைபெற்றது. இதில் இந்​திய கூடைப்​பந்து சங்​கத்​தின் தலை​வர் ஆதவ் அர்​ஜூனா கூறும்​போது, “சவுதி அரேபியா - இந்​தியா இடையி​லான போட்​டி​யில் வெற்றி பெறு​வதற்கு இரு அணிகளுக்குமே சமவாய்ப்பு உள்​ளது.

இந்​திய அணி கடந்த சில வருடங்​களாக பெரிய அளவில் முன்னேற்​றம் கண்​டுள்​ளது. சர்​வ​தேச தரத்​திலான பயிற்சிகளுடன் புள்​ளி​களை குவிப்​ப​தி​லும், விரை​வாக செயல்படுவ​தி​லும் தற்​போது கவனம் செலுத்தி வரு​கிறோம். பயிற்சி முறை​களில் மாற்​றங்​களை கொண்டு வந்​ததன் காரணமாகவே கடந்த 6 மாதங்​களாக இந்​திய அணி சிறந்த செயல்திறனை வெளிப்​படுத்தி வரு​கிறது.

இந்​நிலை​யில் இந்த இரு அணி​களும் மோதும் 2-வது ஆட்​டம் இன்று (நவ.30-ம் தேதி) மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் நடை​பெறுகிறது. இதுதொடர்​பான பத்திரி​கை​யாளர்​கள் சந்​திப்பு நேற்று சென்​னை​யில் நடை​பெற்​றது. இதில் இந்​திய கூடைப்​பந்து சங்​கத்​தின் தலை​வர் ஆதவ் அர்ஜூனா கூறும்​போது, “சவுதி அரேபியா - இந்​தியா இடையிலான போட்​டி​யில் வெற்றி பெறு​வதற்கு இரு அணிகளுக்குமே சமவாய்ப்பு உள்​ளது.

இந்​திய அணி கடந்த சில வருடங்​களாக பெரிய அளவில் முன்​னேற்​றம் கண்​டுள்​ளது. சர்​வ​தேச தரத்​திலான பயிற்​சிகளு​டன் புள்ளி​களை குவிப்​ப​தி​லும், விரை​வாக செயல்​படு​வ​தி​லும் தற்போது கவனம் செலுத்தி வரு​கிறோம். பயிற்சி முறை​களில் மாற்​றங்​களை கொண்டு வந்​ததன் காரண​மாகவே கடந்த 6 மாதங்களாக இந்​திய அணி சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தி வரு​கிறது.