மகனை சரியா வளர்க்கல; கனவில் சொன்ன தாய்!. கண்ணீர் சிந்திய ராமதாஸ்!.

மகனை சரியா வளர்க்கல; கனவில் சொன்ன தாய்!. கண்ணீர் சிந்திய ராமதாஸ்!.

சில்லறை பசங்களை வைத்து அன்புமணி தன்னை அவமானப்படுத்திவிட்டார் என கூறி ராமதாஸ் கண்ணீர் சிந்தியுள்ளார்.

சேலத்தில் பாமக சார்பில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் பாமகவின் புதிய தலைவராக ராமதாஸை தேர்வு செய்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  மேலும் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், வேட்பாளர்களை தேர்வு செய்யும் முடிவை ராமதாஸ் எடுப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கியதையும் அங்கீகரித்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பசுமை தாயகம் தலைவர் பதவியில் இருந்து சௌமியா அன்புமணியை நீக்கம்செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ஒருநாள் கனவில் தனது தாயார் வந்ததாக கூறினார். அப்போது பிள்ளையை சரியாக வளர்க்காததால் நீ இப்படி கண்ணீர் சிந்துகிறார் என சொன்னதாக கூறினார். மேலும் மருத்துவமனைக்கு சென்றால் கூட ஏன் அன்புமணி இப்படி செய்கிறார் என மருத்துவர்கள் கேட்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அப்போது அருகில் இருந்த அவரது மகள் ஸ்ரீகாந்தி அவரது கையைப்பிடித்து தேற்றினார். இதை பார்த்த பாமக தொண்டர்கள் அழ வேண்டாம், அழ வேண்டாம் என கூச்சலிட்டனர்.
Share.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

© மேலும் இதில் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த punnagaiseithi.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.