பருவநிலை மாற்றத்தால் பாதித்த நாடுகளுக்கு கூடுதல் நிதி: பிரேசில் உச்சி மாநாட்டில் முடிவு

பருவநிலை மாற்றத்தால் பாதித்த நாடுகளுக்கு கூடுதல் நிதி: பிரேசில் உச்சி மாநாட்டில் முடிவு

ஐ.நா. பரு​வநிலை தொடர்​பான உச்சி மாநாடு (சிஓபி 30) பிரேசிலில் நவ.10-ல் தொடங்​கியது. இதில், பருவநிலை மாற்றத்தால் பாதித்த நாடு​களுக்கு கூடு​தல் நிதி வழங்குவதற்கான ஒப்​பந்​தம் அமை​தி​யான முறை​யில் மேற்கொள்​ளப்​பட்​டது.

ஆனால், இந்த ஒப்​பந்​தத்​தில் புதை படிவ எரிபொருட்​களை படிப்படி​யாக குறைப்பதற்​கான அல்​லது போது​மான அளவு கார்பன் உமிழ்வு குறைப்பு திட்​டங்​களை வலுப்​படுத்​து​வதற்​கான வெளிப்​படை​யான வரைவு திட்​டம் எது​வும் இடம்​பெற​வில்​லை. புதை படிவ எரிபொருட்​களில் இருந்து வில​கிச் செல்​வதற்​கான திட்​டங்​கள் குறித்து அறி​விப்​பு வெளி​யிடப்​ப​டாதது சுற்​றுச்​சூழல் ஆர்​வலர்​களிடையே ஏமாற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.