“இந்தியாவின் பதிப்பக தலைநகராக சென்னை உயர்ந்துள்ளது” - உதயநிதி பெருமிதம்

“இந்தியாவின் பதிப்பக தலைநகராக சென்னை உயர்ந்துள்ளது” -   உதயநிதி பெருமிதம்

இந்​தி​யா​வின் பதிப்பக தலைநக​ராக சென்னை உயர்ந்​துள்​ளது என துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பெரு​மிதத்​துடன் தெரி​வித்​தார்.

தென்​னிந்​திய புத்தக விற்​பனை​யாளர்​கள் மற்​றும் பதிப்​பாளர்​கள் சங்​கத்​தின் (பபாசி) சார்​பில், 49-வது சென்னை புத்​தகக்காட்​சி, நந்​தனம் ஒய்​எம்​சிஏ மைதானத்​தில் ஜனவரி 8-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது.

இந்​நிலை​யில், இந்த ஆண்​டுக்​கான பபாசி விருதுகள் வழங்​கும் விழா, புத்​தகக் காட்சி வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்ற துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் விருதுகளை வழங்​கி​னார்.

சிறந்த பதிப்​பாள​ருக்​கான பதிப்​பகச் செம்​மல் க.கணபதி விருது - ஐந்​திணை பதிப்​பகம், சிறந்த நூல​கருக்​கான பூங்​கொடி வே.சுப்​பையா விருது - எஸ்.வனஜா (அண்ணா நூற்​றாண்டு நூல​கம்), சிறந்த குழந்தை எழுத்​தாள​ருக்​கான குழந்தை கவிஞர் அழ.வள்​ளியப்பா விருது - மு.​முரு​கேஷ், சிறந்த எழுத்​தாள​ருக்​கான முதல் பெண் பதிப்​பாளர் அம்​சவேணி பெரியண்​ணன் விருது - ஜா.தீ​பா, சிறந்த சிறு​வர் அறி​வியல் நூலுக்​கான நெல்லை சு.​முத்து விருது - அ.லோகமா தேவி, முத்​தமிழ்க் கவிஞர் ஆலந்​தூர் கோ.மோக​னரங்​கன் கவிதை இலக்​கிய விருது - செ.​பா. சிவ​ராசன், சிறந்த தன்​னம்​பிக்கை நூலுக்​கான சிந்​தனைக் கவிஞர் கவி​தாசன் விருது - முனை​வர் சுந்தர ஆவுடையப்​பன் ஆகியோ​ருக்கு வழங்​கப்​பட்​டன.

இதற்​காக வாசகர்​கள் சார்​பில் பபாசிக்கு பாராட்​டு​களை தெரி​வித்​துக் கொள்​கிறேன். துணை முதல்​வர் உட்பட எத்​தனையோ பொறுப்​பு​களில் இருந்​தா​லும் ஒரு பதிப்​பாளர் என்ற முறை​யில் இந்த புத்​தகக்காட்​சி​யில் பங்​கேற்​ப​தில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு​புறம் சென்னை புத்​தகக் காட்சி நடை​பெற்று வரு​கிறது. மற்​றொரு புறம் பன்​னாட்டு புத்​தகக் காட்சி ஞாயிற்​றுக்​கிழமை நிறைவடைந்​துள்​ளது. இவ்​வாறாக சென்னை இந்​தி​யா​வின் பதிப்​பகத் தலைநக​ராக (பப்​ளிஷிங் கேப்​பிடல்) உயர்ந்​திருக்​கிறது.இவ்​வாறு அவர் பேசி​னார். விழா​வில் அமைச்சர்​கள் அன்​பில் மகேஷ் பொய்​யா மொழி, மா.சுப்​ரமணி​யன், பபாசி நிர்​வாகி​கள் கலந்​து கொண்​டனர்.