மத்திய அரசில் 61,000 பேருக்கு வேலைக்கான நியமன கடிதம்: பிரதமர் மோடி வழங்கினார்

மத்திய அரசில் 61,000 பேருக்கு வேலைக்கான நியமன கடிதம்: பிரதமர் மோடி வழங்கினார்

நாடு முழு​வதும் 45 இடங்​களில் நேற்று வேலை​வாய்ப்பு திரு​விழா நடை​பெற்​றது. இதில் பிரதமர் மோடி காணொலி முறை​யில் பங்​கேற்று 61,000 பேருக்கு மத்திய அரசு வேலைக்​கான நியமன கடிதங்​களை வழங்​கி​னார்.

மத்​திய அரசு சார்​பில் ‘ரோஜ்கர் மேளா’ என்ற பெயரில் வேலை​வாய்ப்பு திரு​விழா நடத்​தப்​பட்டு வரு​கிறது. இதில் அரசின் பல்​வேறு துறை​களில் காலி பணி​யிடங்​களை நிரப்ப தகு​தி​யான நபர்​களுக்கு நியமன கடிதங்​களை பிரதமர் மோடி வழங்கி வரு​கிறார். மற்ற மாநிலங்களில் அமைச்சர்கள் நியமன கடிதங்களை வழங்கி வருகின்றனர்.

இந்​நிலை​யில் 18-வது வேலைவாய்ப்பு திரு​விழா நாடு முழு​வதும் 45 இடங்​களில்  நடை​பெற்​றது. இதில் பிரதமர் மோடி காணொலி முறை​யில் பங்​கேற்று 61,000 பேருக்கு நியமன கடிதங்​களை வழங்​கி​னார். இந்​நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது:

உலகிலேயே இளைஞர்​களை அதி​கம் கொண்ட நாடு இந்​தி​யா. அவர்​களுக்​காக பல நாடு​களு​டன் இந்​தியா வர்த்தக ஒப்​பந்​தம் செய்​கிறது. இந்த வர்த்தக ஒப்​பந்​தங்​கள் நாட்​டில் உள்ள இளைஞர்​களுக்கு புதிய வாய்ப்​பு​களை கொண்டு வரு​கின்​றன.

அரசுத் துறை​களில் பணி​யாற்ற நியமன கடிதம் பெற்​றுள்ள 61,000-க்​கும் மேற்​பட்​டோரின் வாழ்​வில் புதிய அத்​தி​யா​யம் தொடங்​கி​யுள்​ளது. இந்த நியமன கடிதங்​கள், நாட்டை மேம்​படுத்​து​வதற்​கும், வளர்ந்த இந்​தி​யாவை உரு​வாக்​கு​வதற்​கான உறு​தி​மொழியை ஏற்​ப​தற்​கு​மான அழைப்பு கடிதங்​கள். இதன் மூலம் இளைஞர்​கள் பலர் நாட்​டின் பாது​காப்​பு, கல்​வி, சுகா​தா​ரம், நிதிசேவை, எரிசக்தி பாது​காப்பு ஆகிய​வற்​றில் முக்​கிய பங்​காற்றி பொதுத்​துறை நிறு​வனங்​களை வளர்ச்​சி​யடைய செய்​வர். நியமனமான இளைஞர்​களுக்​கு வாழ்த்​துக்​கள். இவ்​வாறு பிரதமர் மோடி கூறி​னார்.

இது குறித்து பிரதமர் அலு​வல​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘‘வேலை​வாய்ப்பு திரு​விழாவை தொடங்​கிய​தில் இருந்து இது​வரை 11 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​ட​வர்​களுக்கு நியமன கடிதங்​கள் அளிக்​கப்​பட்​டுள்​ளன. புதி​தாக நியமனம் செய்​யப்​பட்​ட​வர்​கள் மத்​திய உள்​துறை, சுகா​தா​ரம் மற்​றும் குடும்ப நலத்​துறை, நிதி சேவை​கள் துறை, உயர்​கல்வி உட்பட பல துறை​களில் பணி​யாற்​று​வர்’’ என கூறி​யுள்​ளது.