சப் - இன்ஸ்பெக்டர் வேலைக்கு ரூ.18 லட்சம் என போலி நியமண ஆணை வழங்கிய நபர் கைது!

சப் - இன்ஸ்பெக்டர் வேலைக்கு ரூ.18 லட்சம் என போலி நியமண ஆணை வழங்கிய நபர் கைது!

 உதவி காவல் ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சத்தை அபேஸ் செய்ததுடன், போலி பணி நியமண ஆணையை வழங்கி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தமிழ்நாடு சீருடைப்பணியில் சேருவதற்கு தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ரஞ்சித்குமார் என்பவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். தனக்கு காவல்துறையில் தெரிந்தவர்கள் உள்ளார்கள் எனவும், அவர்கள் மூலம் எளிதாக உதவி காவல் ஆய்வாளர் வேலை வாங்கிவிடலாம் எனவும் ரஞ்சித்குமார் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதைக் கேட்ட சீனிவாசன் தனக்கும் வேலை வாங்கி தர கேட்டுள்ளார். அதற்கு ரஞ்சித்குமார் ஒரு தொகையை நிர்ணயித்து, அதனை கொடுத்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என கூறியுள்ளார்.

அதனை நம்பி சீனிவாசன் 2017 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை பல தவணைகளாக சுமார் 18 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். கடந்த மாதம் ரஞ்சித்குமார் பணி நியமண ஆணை எனக் கூறி ஒரு தாளை சீனிவாசனிடம் கொடுத்துள்ளார். மேலும், இதனை காவல்துறையிடன் கொடுத்தால் வேலைக்கு எடுத்து கொள்வார்கள் என கூறியுள்ளார். இதை நம்பி சீனிவாசன் கடந்த வாரம் ஒரு காவல் நிலையத்துக்கு சென்று அந்த ஆணையை கொடுத்துள்ளார். அப்போது காவலர்கள் இது போலியான பணி நியமண ஆணை என்பதை கண்டறிந்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த சீனிவாசன் செய்வதறியாமல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.அந்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் ரஞ்சித்குமார் நாவலூர் ப

தியைச் சேர்ந்தவர் என்பதும், இதேபோல் அரசு வேலை வாங்கிதருவதாக பலரிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.

தொடர்ந்து ரஞ்சித்குமாரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து போலியாக அச்சிடப்பட்ட பணி நியமன ஆணைகள், வங்கி புத்தகம் என வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. பின் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு, உடனடியாக சம்பந்தப்பட்டவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்த மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு காவல் குழுவினரை சென்னை காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.