நவ.5, 6-ம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு

நவ.5, 6-ம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு

சென்னையில் நவ. 5, 6-ம் தேதிகளில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம், அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆண்டுதோறும், முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். அந்த வகையில், வரும் நவ 5 மற்றும் 6 ம் தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம்- ஒழுங்கு நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வர் விரிவான ஆய்வு மேற்கொள்வார்.