9 மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள–கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் இன்று (அக். 18) ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், வரும் 20, 22, 23-ம் தேதிகளிலும் பெரும்பாலான இடங்களிலும், 19, 21-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.