10,000-க்கும் மேற்பட்ட காலியிடம்... 8ம் வகுப்பு படித்தால் போதும்
ஆவடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (டிச.20) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் பணிவாய்ப்பு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆவடி, சத்தியமூர்த்தி நகர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கிறது. தங்களுக்கு தேவையான 10,000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த முகாமில் திருவள்ளுர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த முகாமில் 8, 10, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ, பொறியியல், செவிலியர் படித்தவர்கள் கலந்துகொண்டு தனியார்துறையில் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகளை பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் Canditate Login-இல் பதிவு செய்து கொள்ளலாம்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அனைவருக்கும் முற்றிலும் அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது . தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. விருப்பமும், தகுதியும் உள்ள வேலைநாடும் இளைஞர்கள் முகாமில் அதிக அளவில் கலந்து கொண்டு, தனியார் துறையில் வேலைவாய்ப்பை பெற்று பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.