தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1600 உயர்வு!
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.24) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1600 உயர்ந்துள்ளது. மாலை நேர நிலவரப்படி, பவுனுக்கு ரூ.1,040 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.1,18,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதனால் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை (ஜன.24) கிராமுக்கு ரூ.70 என உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,620-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,16,960-க்கு விற்பனையானது. மேலும், 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.1,27,592-க்கும் விற்பனையானது. 18 காரட் தங்கம் பவுன் ரூ.97,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தற்போது, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன 24) காலையில் பவுனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில், மீண்டும் மதியம் ரூ.1,040 அதிகரித்துள்ளது. தற்போது, கிராமுக்கு ரூ.130 உயர்ந்துள்ளது. அதாவது, ஒரு கிராம் ரூ. 14,750-க்கும், ஒரு பவுன் ரூ.1,18,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.365-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ 10,000 உயர்ந்து, ரூ.3,65,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது.