போக்குவரத்து அபராதங்களில் 71% வசூலிக்கப்படவில்லை.. வெளியான புதிய தரவுகள்

போக்குவரத்து அபராதங்களில் 71% வசூலிக்கப்படவில்லை.. வெளியான புதிய தரவுகள்
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தில் 71 சதவீதம் வசூலிக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. 
தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாவதர்களுக்கு விதிக்கப்படும்.  அபராத தொகையை பெரும்பாலானோர் செலுத்தாமல் இருப்பது  தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிவிப்பில், அதிக வேகம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாதது உள்ளிட்டவற்றுக்காக 2024ஆம் ஆண்டு மட்டும் ஒருகோடியே 11 லட்சம் E CHALLAN வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் ஆயிரத்து 325 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் 314 கோடி ரூபாய்  மட்டுமே வசூலிக்கப்பட்டது. இது வெறும  24 சதவீதமாகும். 3 ஆண்டுகளில் மொத்தம் 2 ஆயிரத்து 975 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில்,  2 ஆயிரத்து 122 கோடி ரூபாய் இன்னும் வசூலிக்கப்படவில்லை.  2022-24 ஆண்டுகளில் மொத்தம் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 574 விபத்துக்கள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
  • 2022 - ரூ.378 கோடி ரூ.161 கோடி
  • 2024  ரூ.1,325 கோடி ரூ.314 கோடி
  • மொத்த விபத்துகள் 1,98,574
  • விதிக்கப்பட்ட அபராதம் 2,975 கோடி
  • வசூலிக்கப்பட்ட தொகை 853 கோடி
  • நிலுவை அபராதம் 2,122 கோடி