ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயி​லில் தை தேரோட்ட திரு​விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான தேரோட்​டம் ஜன.31-ம் தேதி நடை​பெறுகிறது.

தை தேரோட்ட திரு​விழா​வின் முதல் நாளான நேற்று அதி​காலை 3.15 மணிக்கு நம்​பெரு​மாள் மூலஸ்​தானத்​தில் இருந்து புறப்​பட்டு கொடியேற்ற மண்​டபம் வந்​தார்.

பின்​னர் கொடிப்​ படம் புறப்​பட்டு வந்து கொடியேற்​றும் நிகழ்ச்சி நடை​பெற்​றது. அதன்​பின், நம்​பெரு​மாள் அங்​கிருந்து புறப்​பட்டு கண்​ணாடி அறையை சென்​றடைந்​தார்.

நம்​பெரு​மாள் உபய​நாச்​சி​யார்​களு​டன் மாலை 6.30 மணிக்கு திருச்​சிவி​கை​யில் புறப்​பட்டு உள் திரு​வீ​தி​களான 4 உத்​திரை வீதி​களில் வலம் வந்து சந்​தனு மண்​டபம் வந்​தடைந்​தார்.

அங்​கிருந்து புறப்​பட்டு யாக​சாலை​யில் திரு​மஞ்​சனம் கண்​டருளிய பின்​னர் இன்​று (ஜன.24) அதி​காலை 2 மணிக்கு கண்​ணாடி அறையை சென்​றடைந்​தார்.

பின்​னர், விழா​வில் தின​மும் காலை​யில் நம்​பெரு​மாள் பல்​வேறு வாக​னங்​களில் புறப்​பட்டு வீதி​யுலா வரும் நிகழ்ச்சி நடை​பெறும். ஜன.29-ம் தேதி நெல் அளவை கண்​டருளுகிறார். 30-ம் தேதி மாலை குதிரை வாக​னத்​தில் நம்​பெரு​மாள் வையாளி கண்​டருளுகிறார்.

விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான தேரோட்​டம் ஜன.31-ம் தேதி காலை நடை​பெறுகிறது. நிறைவு நாளான பிப்​.2-ம் தேதி நம்​பெரு​மாள் ஆளும்​பல்​லக்​கில் எழுந்​தருளி உள் வீதி​களில் வலம் வரு​கிறார்.

விழாவுக்​கான ஏற்​பாடு​களை கோயில் இணை ஆணை​யர் சிவ​ராம்​கு​மார், கண்​காணிப்​பாளர் வெங்​கடேசன் மற்​றும் அலு​வலர்​கள், ஊழியர்​கள் செய்து வரு​கின்​றனர்