திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் வருவாயை நீதிமன்ற கணக்கில் செலுத்த உத்தரவு

திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் வருவாயை நீதிமன்ற கணக்கில் செலுத்த உத்தரவு

திண்​டுக்​கல்​லில் சாலை விரி​வாக்​கத்​துக்​காக நிலத்தை அரசு கையகப்​படுத்​திய விவ​காரத்​தில் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு இழப்​பீடு வழங்க தாமத​மானதையடுத்​து, அம்மாவட்டத்​தில் உள்ள டாஸ்​மாக் வரு​வாயை நீதி​மன்ற கணக்​கில் செலுத்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது.

திண்​டுக்​கல்லை சேர்ந்த முத்​து, கல்​யாணி, சிவ​சாமி, காளி​முத்து உள்​ளிட்ட 30 பேர் தங்​களது கடைகள் அமைந்​திருந்த இடத்தை 2017-ம் ஆண்டு கையகப்​படுத்​தி​யதற்கு வழங்​கப்​பட்ட இழப்​பீட்​டில் குறைக்​கப்​பட்ட தொகையை வழங்​கக் கோரி 2019-ம் ஆண்டு மாவட்ட நீதி​மன்​றத்​தில் வழக்கு தாக்​கல் செய்​தனர்.

வழக்கை விசா​ரித்த மாவட்ட நீதி​மன்​றம் 2021-ம் ஆண்டு ரூ.4 கோடியே 37 லட்​சத்து 42 ஆயிரத்து 783 இழப்​பீ​டாக வழங்க அரசுக்கு உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து அரசு தரப்​பில் 2023-ம் ஆண்டு உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் குறைக்​கப்​பட்ட இழப்​பீட்​டுத் தொகையை 8 வாரங்​களுக்​குள்​ளாக வழங்​கி, உத்​தரவு நிறைவேற்​றப்​பட்​டது தொடர்​பான அறிக்​கையை நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டது.

இந்த வழக்கு நீதிப​தி​கள் வேல்​முரு​கன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் முத்து கணேசபாண்​டியன் ஆஜரா​னார். பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில், ‘‘ஜூலை 28, ஆக. 26, செப்​. 1, அக்​.7 ஆகிய தினங்​களில் 4 முறை வழக்கு விசா​ரணை தள்​ளிவைக்​கப்​பட்ட நிலை​யில், தற்​போது வரை அரசு தரப்​பில் உத்​தரவை நிறைவேற்​றவோ அல்​லது உச்ச நீதி​மன்​றத்​தில் நீதி​மன்ற உத்​தரவை எதிர்த்து வழக்கை தாக்​கல் செய்​யவோ எந்த நடவடிக்​கை​யை​யும் எடுக்​க​வில்​லை.

எனவே, தமிழக அரசு இந்த உத்​தர​வின் நகலை பெற்ற தினத்​தில் இருந்​து, திண்​டுக்​கல் மாவட்​டத்​தில் உள்ள அனைத்து டாஸ்​மாக் கடைகளின் தினசரி விற்​பனை தொகை​யை​யும் திண்​டுக்​கல் நிலம் கையகப்​படுத்​துதல் மறுசீரமைப்பு வழக்கை விசா​ரிக்​கும் முதன்மை மாவட்ட நீதிப​தி​யின் கோப்​பில் உள்ள இந்த வழக்​கு​களின் நன்​மைக்​காக வைப்​புத்தொகை​யாக நீதி​மன்​றக் கணக்​கில் செலுத்த உத்​தர​விடப்​படு​கிறது. மறு உத்​தரவு வரும் வரை இந்த உத்​தரவு அமலில் இருக்​கும்’’ என்று உத்​தர​விட்​டனர்.

மேலும், இந்த உத்​தர​வின் நகலை டாஸ்​மாக்​கின் மேலாண் இயக்​குநர் மற்​றும் திண்​டுக்​கல் டாஸ்​மாக் மாவட்ட மேலா​ளர் ஆகியோ​ருக்கு அனுப்ப நீதி​மன்ற பதி​வாள​ருக்கு அறி​வுறு​த்​தினர்​.