புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமைத் தொகை: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் தகவல்

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமைத் தொகை: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் தகவல்

 ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்​களில் புதி​தாக விண்​ணப்​பித்த தகு​தி​யான பெண்​களுக்கு டிசம்​பர் 15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்​கப்​படும் என்று சட்​டப்​பேர​வை​யில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரிவித்தார். சட்​டப்​பேர​வை​யில் நடப்பு 2025-26-ம் நிதி ஆண்​டின் கூடு​தல் செல​வுக்​கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடை​பெற்​றது. அப்​போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்​டத்​தின் பயன்​கள் குறித்து உறுப்​பினர்​கள் பேசினர்.

இந்த விவாதத்​துக்கு இடையே, துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் பேசி​ய​தாவது: நாடே திரும்​பிப் பார்க்​கும் வகை​யில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்​டத்தை கடந்த 2023-ல் அண்ணா பிறந்​த​ நாளான செப்​.15-ம் தேதி, முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்.

பெண்​களின் பொருளா​தார விடு​தலைக்கு துணை நிற்​கும் இந்த திட்​டம் மூலம் சுமார் 1.14 கோடி பெண்​களுக்கு மாதம்​தோறும் ரூ.1,000 வழங்​கப்​படு​கிறது. கடந்த 26 மாதங்​களில் ஒவ்​வொரு​வருக்​கும் ரூ.26 ஆயிரம் வீதம் ஒட்​டுமொத்​த​மாக ரூ.30 ஆயிரம் கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த திட்​டத்​தில் அதிக பெண்​கள் பயனடைய வேண்​டும் என்​று, சில விதி​களை முதல்​வர் தளர்த்​தி​யுள்​ளார். உதா​ரண​மாக, அரசு மானி​யத்​தில் நான்கு சக்கர வாக​னம் வைத்​திருக்​கும் குடும்​பங்​கள், முதி​யோர் ஓய்​வூ​தி​யம் பெறும் குடும்​பங்​களில் விதி​களை பூர்த்தி செய்​யும் பெண்​களுக்​கும் உரிமைத் தொகை சேர்த்து வழங்​கப்​படும் என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் அறி​வித்​தார்.

இதற்​கிடையே, அரசு சேவை​கள் மக்​களைத் தேடி சென்​றடை​யும் நோக்​கிலான ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்​கள் மூலமாக, கிராமப்​புறங்​களில் 15 துறை​களின் வாயி​லாக 45 சேவை​களும், நகர்ப்​புறங்​களில் 13 துறை​களின் வாயி​லாக 43 சேவை​களும் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்த முகாம்​களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்​டத்​துக்​கான மனுக்​களும் ஏற்​கப்​படும் என்று முதல்​வர் அறி​வித்​தார்.

இதற்​காக, நவம்​பர் 15 வரை 10 ஆயிரம் முகாம்​கள் நடத்​தப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது. அக்​.10 வரை 9,055 முகாம்​கள் நடத்​தப்​பட்​டுள்​ளன. மகளிர் உரிமைத் தொகை கோரி இந்த முகாம்​களில் இது​வரை 28 லட்​சம் பெண்​கள் விண்​ணப்​பம் அளித்​துள்​ளனர்.

உங்​களு​டன் ஸ்டா​லின் திட்ட முகாம்​கள் நவம்​பர் 14-ம் தேதி முடிவடைய உள்​ளன. இதற்​கிடையே, உரிமைத் தொகை கோரி புதி​தாக பெறப்​பட்ட விண்​ணப்​பங்​களை வரு​வாய்த் துறை​யினர் களஆய்வு செய்து வரு​கின்​றனர். இந்த பணி நவம்​பர் 30-ம் தேதிக்​குள் முடிவடை​யும். முகாம்​களில் விண்​ணப்​பித்த தகு​தி​யான பெண்​களுக்கு டிசம்​பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க முதல்​வர் முடி​வெடுத்​துள்​ளார். இவ்​வாறு அவர் பேசி​னார்​.