சிவலிங்கம் நிறுவும் பணி: முதல்வர் நிதிஷ் குமார் ஆய்வு
பிஹாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டம் கல்யாண்பூர் அருகில் புதிதாக விராட் ராமாயணக் கோயில் கட்டப்படுகிறது. இங்கு 33 அடி உயர பிரம்மாண்ட சிவலிங்கம் நிறுவும் பணி நேற்று நடைபெற்றது. இப்பணியை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பார்வையிட்டார்.
பிறகு கோயில் வளாகத்தை பார்வையிட்ட நிதிஷ் குமார் அங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.